
டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை
சென்ற நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் பல நாடுகளில் மரணக்களங்களாகத்தான் இருந்தன. குறிப்பாக உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பா சந்தித்த இழப்புகள் பல இலட்சம். ஆனாலும், அக்காலங்களில் கோழைத்தனமான கொடூரங்களை அரங்கேற்றிய பலர் நடுவில் அவர்களை மிகத்தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் தோன்றினர். அவர்களில் ஒருவர் டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer) . இவர் ஒரு ஜெர்மானியர், கிறிஸ்தவர். தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திராதவர் போன்ஹோஃபர். வரலாற்றின் கருமையான பக்கங்களில் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் இவர்…

இரும்பை இரும்பு
கூராக, அபாயகரமாக எதாவது இரும்பு முனைகள் (அல்லது பிளாஸ்டிக், மரம்) நீட்டிக்கொண்டு இருக்கும். கவனியாமல் விட்டால், இப்போது இல்லாவிட்டால் ஒரு நேரம் ‘சரக்’கென்று அது ‘இரத்தம் கேட்பது’ உறுதி. எனவே, ஒரு நல்ல அரம் இருப்பின் அதைக் கொண்டு உடனடியாக அந்தப் பகுதியைத் தேய்த்து முனை மழுங்கப்பண்ணிவிடுவது நல்லது. ஆங்கிலத்தில் Iron file அல்லது Rasp என்னும் நல்ல அரம் ஒன்று எப்போதும் என்னிடம் இருக்கிறது. முன்பைப்போல கத்தி தீட்டுபவர்களை அதிகம் தெருக்களில் காணமுடிவதில்லை. எனவே, அதை…

ஒரு நேரத்தில் ஒரு அடி
இரவுகள் இருளாக இருந்த காலங்கள் அது. இன்று போல லைட் ஃபொல்யூஷன் இல்லாத காலங்கள். இன்று நகரங்களில் மட்டுமல்ல, குறுநகரங்களில் கூட ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருளை மறைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு – அன்று ஒரு இரவில் ஆபிரகாமால் தேவன் வானத்தைப் பார்க்கச்சொன்ன போது சுமார் 20000 நட்சத்திரங்களைப் பார்த்து, எண்ணி இருக்க முடியுமாம். இன்று பல நாட்களில் நம்மால் அது இயலாது. நட்சத்திரங்களைக் கோள்களைப் படமெடுக்க விண்வெளிப் புகைப்பட ஆர்வலர்கள் இருளைத்தேடி அலைகிறார்கள்….

பாவமும் பரிசுத்தமும்
கிறிஸ்துவுக்குள் இருப்பவனுக்கு பாவம் என்றால் என்ன என்று அறிவது பெரியவிஷயமே இல்லை. சுருக்கமாக நினைவில் கொள்ள “இதெல்லாம் ஒரு பிரச்சனையா, தப்பா, ஆகாதா என்று கேள்வி வந்தால், அங்கு நிச்சயம் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது. அது பெரும் குற்றமாக மனதில் பளிச்செனத் தெரியாவிட்டாலும், குற்றத்தின் நிழலான ஏதோ ஒன்றாக – ஒரு மீறுதல், அக்கிரமம் அல்லது பாவமாக இருக்கலாம். கிறிஸ்தவன் என்பவன் பாவத்தை மேலாண்மை செய்பவன் அல்லன். புது சிருஷ்டியாக இருக்கும் அவன், இன்று அவருடைய பரிசுத்ததில்…

தாங்கமாட்டீர்கள் பாகம் 6 – சுவிசேஷம்
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4] [பாகம் 5] “ஓ, இதுதானா அது” என்கிற ஆச்சரியமான அனுபவம் இல்லாதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை. பலவருடங்கள் படித்துப் பரிட்சைகளில் பாஸாகி இருந்தாலும் அவற்றின் உண்மையான விளக்கங்கள் பிற்காலங்களில் கிடைத்த அவை புரிகிற காலத்தில் கிடைத்திருக்கும். “இதைத்தான் படிக்க அப்போது திணறினோமா?” என்று நினைக்கவைக்கும் தருணங்கள் அவை. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பூமியில் இருந்த காலங்களில், தன் சீஷர்கள்தான் என்றாலும் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாகப் போதித்துவிடவில்லை. அவர் இறைத்தன்மை கொண்டிருந்தவர் என்றபோதிலும் சீஷர்களின் கேட்டறியும்…

சார்லஸ் (சக்) கோல்சன்: அரசியல் அதிகாரத்திலிருந்து சிறைச்சாலை ஊழியத்திற்கு
சார்ல்ஸ் “சக்” (Chuck) கோல்சன் – தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சென்ற நூற்றாண்டு கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நபர். நாம் அறிந்துகொள்ளவேண்டியவர். அவரது வாழ்க்கை மீட்பின் சாட்சியாகவும், நம்பிக்கையின் செய்தியாகவும் அமைந்த ஒன்று. சுவாரசியமான அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகமே இக்கட்டுரை. சென்ற நூற்றாண்டின் நடுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் செயல்பாட்டாளராக இருந்தவர் சார்ல்ஸ் கோல்சன். பிற்காலங்களில் இரட்சிப்புக்குள்ளாக வந்தபின், சிறைக்கைதிகளுக்காகவும் அவர்கள் சார்ந்த விளிம்பு நிலை…

உபதேசங்களாகக் கற்றுக்கொள்ளுங்கள்
வசனங்கள் நம் இருதயத்தில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால், வசனங்களை மாத்திரம் அறிந்து வைத்திருக்காமல், முழுமையான உபதேசங்களையும் அறிந்து வைத்திருப்பதுதான் கிறிஸ்த வாழ்வின் வெற்றி இரகசியம். யோவான் 3:16இல் இரட்சிப்பு இயேசு வழியாக என்று அறிந்து, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்பைப் பெற்று கிறிஸ்தவராக சபையில் சேர்க்கப்படுவது என்பது அந்த ஒற்றை வசனத்தால் நடப்பது அல்ல. மாறாக ஒரு முழுமையான இரட்சிப்பின் சத்தியத்தை உபதேசமாக அறிந்திருப்பதன் மூலம்தான். கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை உபதேசங்களை பல வசனங்களை…

தாங்கமாட்டீர்கள் பாகம் 4 – சத்தியம்
[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] …[பாகம் 5] ஆண்டவர் பூமியில் இருந்தகாலங்களில் கிருபையைப் போதிக்கவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். தேபோல் ஆச்சரியமானவிதமாக அவர் விளக்கிச் சொல்லாத மற்றொரு விஷயம் கிறிஸ்தவத்தின் அடிநாதமான ‘சத்தியம்’! அதை அவர் ஒரு உபதேசமாகச் சொல்லி விளக்கவில்லை. அதற்குக் காரணம் சீடர்கள் தாங்கமாட்டார்கள் என்ற காரணமாகத்தான் இருக்கமுடியும். ஆனாலும், அவரது குரலை வீதிகளில் கேட்டவர்கள் அவர் போதிப்பது சத்தியம் என்று சில பரிசேயர்கள் அனுப்பிய சில ஏரோதியரான வேவுக்கார்…

நாம் ஏன் சிலுவை சுமக்க வேண்டும்?
சிலுவை என்றால் ‘டக்’கென்று நம் மனதில் வருவது இயேசு சுமந்தது சென்ற சிலுவை மரம். சர்ச்களின் மேல், ஆல்டர்களில் இருப்பது, கழுத்துகளில் தொங்கி அலங்கரிப்பது இப்படி. பொதுவாக துயரத்தின் சின்னம். கிறிஸ்தவர்களுக்கு கல்வாரியை அடுத்த நொடி கண்முன் நிறுத்தும். அவர் சுமந்த தடுமாறிச் சென்றது ‘இயேசு’ வாழ்க்கைப் படங்களில் பார்த்தவர்களுக்கு இன்னும் சித்திரமாக மனதில் தோன்றும். இயேசு சிலுவை சுமந்தார், ஆனால், அவர் அப்படிச் சுமக்கும் முன்பே இருவேறு இடங்களில் தம் சீஷர்களையும் ‘அவர்களது’ சிலுவையைச் சுமக்கச்…

தாங்கமாட்டீர்கள் – பாகம் 3
(பாகம் 1) (பாகம் 2) நான்கு சுவிசேஷ நூல்களிலும் நுழைந்து நன்றாக கவனித்தீர்கள் என்றால் இயேசுக்கிறிஸ்து பூமியில் இருந்த காலங்களில் அவர் போதிக்காத வார்த்தை ஒன்று “கிருபை”. இது ஆச்சரியமான விஷயம் தான். அவர் வாயில் இருந்து கிருபை என்கிற வார்த்தை வெளிப்படவில்லை. ஆனால், அதற்குக்காரணம் சாதாரணமானதே. கிருபை என்கிற – யூதர்கள் நன்றாக அறிந்திருந்த வார்த்தையை அவர் போதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவு வாழ்ந்துகாட்டினார். தன் ஒவ்வொரு செயல்களிலும் கிருபையை வெளிப்படுத்தினார். வருடக்கணக்கில் நோயுற்றுக்கிடந்தவர்களை…